Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2024 18:29:17 Hours

12 வது படைப்பிரிவின் படையினர் ஹம்பாந்தோட்டையில் குழியில் வீழ்ந்த யானை குட்டி மீட்பு

2024 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை, மாகம்புரவில் உள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகாமையில் உள்ள கொங்கிறீட் குழியில் தவறி விழுந்த யானைக் குட்டியை 12 ஆவது காலாட் படைபிரிவின் படையினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து மீட்டனர்.

12 வது காலாட் படைபிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சீ எஸ் முனசிங்க டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

யானை குட்டிக்கு ஏற்பட்டிருந்த சிறு காயத்திற்கு அப்பகுதியின் வனவிலங்கு அலுவலகம் தேவையான சிகிச்சைகளை அளித்தது. தாய் யானை அருகாமையில் இல்லாததால், மேலதிக பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்காக வனவிலங்கு முகவரால் யானை குட்டி பாதுகாப்பாக உடவலவயில் உள்ள யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.