29th March 2024 19:20:07 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் படையணியின் படைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் 2024 மார்ச் 22 முதல் 24 வரை கட்டளையின் கீழ் உள்ள படையலகுகளுக்கு தனது முதல் விஜயத்தினை மேற்கொண்டார்.
அதன்படி அவர் 3வது இஇலேகா படையணி, 4வது இஇலேகா படையணி, 6 வது இஇலேகா படையணி, 7வது இஇலேகா படையணி, 10 வது இஇலேகா படையணி, 12வது இஇலேகா படையணி, 15வது இஇலேகா படையணி, 19வது இஇலேகா படையணி, 9 வது(தொ) இஇலேகா படையணி மற்றும் 17வது(தொ) இஇலேகா படையணிகளுக்கு தனது விஜயத்தினை மேற்கொண்டார். படையணி படைத் தளபதி அந்தந்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகளிடமிருந்து அன்பான வரவேற்பைப் பெற்றதுடன் மேலும் அவர் ஒவ்வொரு படையலகிலுள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு ஆற்றிய உரையில் ஒழுக்கத்தை பேணுதல், சட்டவிரோத செயல்களைத் தடுப்பது, நிகழ்நிலை சூதாட்டத்தைத் தவிர்ப்பது மற்றும் சமூக ஊடகங்களைக் கையாளுதல் ஆகியவற்றின் பாவனை தொடர்பில் வலியுறுத்தினார்.
இந்த விஜயத்தின் போது, 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாஜன் மேஜர் விடுதி தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.