Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th March 2024 19:21:48 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினருக்கு இராணுவ பதவி நிலை பிரதானி உரை

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் 19 மார்ச் 2024 அன்று பனாகொட மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

அவரின் வருகையை தொடர்ந்து 6 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களால் வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் படையினருக்கு உரையாற்றிய பதவி நிலை பிரதானி அவர்கள் சமூக அபிவிருத்தியின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள், இராணுவத்தின் பங்கு மற்றும் பணிகளில்,பொலிஸ் மற்றும் ஏனையவர்களிடம் உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவம் பாதுகாப்பு ஈடுபாடுகள், சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, முடிவெடுக்கும் செயல்முறைகள், நடைமுறை அணுகுமுறைகள், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான உதவி, நல்லெண்ணத்தைப் பேணுதல் மற்றும் இராணுவத்தின் கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் என்பவை தொடர்பாக எடுத்துரைத்தார்.

மேலும், கொழும்பு பிரதேசத்திலும் மேல்மாகாணத்திலும் முன்னுதாரணமாக கடமையாற்றிய படையினருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். சவாலான சூழ்நிலைகளில் பொதுமக்களுடன் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் மேம்படுத்துவதில் அவர்களின் முயற்சிகளை அங்கிகரித்தார்

விஜயத்தின் முடிவில், மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி, இராணுவ பதவி நிலை பிரதானியின் வருகை மற்றும் வழிகாட்டுதலுக்கு பாராட்டுச் சின்னமாக நினைவுச் சின்னம் வழங்கினார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.