22nd March 2024 11:20:42 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஏடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம் அதன் 26 வது ஆண்டு நிறைவை தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் 18 மார்ச் 2024 அன்று கொண்டாடியது.
ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவான்வெளி மகா தூபி, வவுனியா கந்தசுவாமி கோவில், வவுனியா ஜும்மா பள்ளிவாசல், மடு மாதா தேவாலயம் போன்ற இடங்களில் மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.
இதன் போது கட்டளையின் கீழுள்ள படையலகுகளுக்கமையிலான கயிறு இழுத்தல், கரப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளும் நடாத்தப்பட்டன. அத்துடன் இசை நிகழ்வும் இடம்பெற்றது.
ஆண்டு நிறைவு நாளில், இராணுவ மரபுகளுக்கு இணங்க, வன்னி பாதுகாப்பு படைத் தளபதிக்கு சம்பிரதாயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், சிறப்பு மேடைக்கு அழைக்கப்பட்ட பின்னர், தளபதிக்கு அணிவகுப்பு மைதானத்தில் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. பின்னர் அவர் குழு படம் எடுத்தல், மரக்கன்று நாட்டல் மற்றும் படையினருக்கான உரை என்பவற்றில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து அனைத்து நிலையினருடனான மதிய உணவில் அவர் படையினருடன் நெருக்கமாக உரையாடினார்.
இந்த கொண்டாட்ட நிகழ்வுகளில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.