18th March 2024 16:15:15 Hours
தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எச்.டி.ஜே.பி வீரதுங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 01 மார்ச் 2024 அன்று இராணுவ தலைமையகத்தில் தகவல் தொழில்நுட்ப பணிப்பகம் தனது 14 வது ஆண்டு நிறைவு விழாவை 2024 மார்ச் 1 ஆம் திகதி தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் ஒற்றுமையின் உணர்வைப் எடுத்துக்காட்டும் குழுப்படத்துடன் ஆண்டு விழா தொடங்கியது. தொடர்ந்து அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தின் போது, தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் பணிப்பாளர் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பணியை வெளிப்படுத்தும் வகையில் வலையமைப்பு நடவடிக்கை நிலையம், கணினி தீர்வு பிரிவு, இணைய தளம் மற்றும் மென்பொருள் அபிவிருத்தி பிரிவு உள்ளிட்ட பல்வேறு திறன்களில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் சிவில் ஊழியர்களின் சேவையை அங்கீகரித்து அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
வீரமரணமடைந்த போர்வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் போதி பூஜையில் படையினர் கலந்துகொண்டதுடன், ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, கொண்டாட்டம், விளையாட்டு மற்றும் நட்புரீதியான போட்டியாக 09 மார்ச் 2024 அன்று லயா லெஷர் குக்குலேகங்கவில் கிரிக்கெட் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.