17th March 2024 15:44:26 Hours
கல்கிசை கடற்கரையில் இலங்கை நீர் விளையாட்டு ஒன்றியம் 2024 மார்ச் 15-16 ஆம் திகதிகளில் நடாத்திய 84 வது வருடாந்த இரண்டு மைல் கடல் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவம் சம்பியன்ஷிப்பை பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் நீச்சல் கழகங்கள் மற்றும் பாடசாலைகள் உட்பட 47 அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 450க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது, இராணுவ நீச்சல் வீரர்கள் உட்பட இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஏ.சி.ஏ. டி சொய்ஸா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களும் நிகழ்வுகளில் தமது பலத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினர்.
இராணுவ நீர் விளையாட்டுக் குழு ஆண்களுக்கான முப்படை போட்டியில் அதிக மதிப்பெண்களைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை பெற்றுக்கொண்டது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் பதவி நிலை பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான திரு. சாகல ரத்நாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.