03rd March 2024 17:14:01 Hours
இலங்கை இலோசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் கேடிபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 2024 பெப்ரவரி 29 அன்று மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் புதிய தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிய தளபதிக்கு நுழைவாயில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதன்பிறகு, மத வழிபாடுகளில் கலந்துகொண்ட பிறகு தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அந் நாளின் நினைவாக தளபதியினால் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
பின்னர் படையினருக்கான உரை அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்து என்பவற்றில் கலந்துகொண்டார். இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.