Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2023 20:50:55 Hours

வெளிசெல்லும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான இஸ்லாமிய குடியரசு பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஆர்) உமர் பாரூக் புர்கி, எச்ஐ (எம்) அவர்கள் இலங்கையில் தனது பதவிக்காலம் முடிந்து பாகிஸ்தானுக்குத் திரும்புவதற்கு முன்னர் வியாழக்கிழமை (டிசம்பர் 28) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இச் சந்திப்பின் போது, பிராந்தியத்தில் பொதுவான நலன்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே எப்போதும் வளர்ந்து வரும் இராணுவ இருதரப்பு உறவுகள் தொடர்பாக இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தனது பதவிக்காலத்தில் இலங்கை இராணுவத்திடம் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இலங்கை இராணுவத்தின் எதிர்கால முயற்சிகளுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, அவரது உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தைப் பாராட்டி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

இலங்கை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மது பாரூக் அவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.