Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th December 2023 18:16:57 Hours

விஷேட படையணியின் முன்னாள் போர்வீர்ரகள் விஷேட படையணி தினத்தில் இணைவு

விஷேட படையணியின் ‘முன்னாள் வீரர்களின் ஒன்றுகூடல்’ 2023 டிசம்பர் 9 – 10 ம் திகதிகள் விஷேட படையணியின் 27வது படையணி தினத்துடன் இணைந்து நாவுல விஷேட படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.

'பிரித்' பாராயணம், போர்வீரர்களை நினைவுக் கூறல் மற்றும் ஒன்றுகூடல் உட்பட படையணி தின நிகழ்வுகள் பல அம்சங்களை உள்ளடக்கியிருந்தது.

முன்னாள் படைவீரர் சங்கம் விஷேட படையணி படைத் தளபதியும் 57 வது காலாட் படையணி தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி மற்றும் விஷேட படையணி நிலைய தளபதி ஆகியோரின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலைப் பெற்றது.

முன்னாள் படைவீரர்களான விஷேட படையணியின் ஸ்தாபகர் மேஜர் ஜெனரல் ஜி ஹெட்டியாராச்சி (ஓய்வு) டப்ளியூ டப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சி, கேணல் டப்ளியூஎம்ஜே பெர்னாண்டோ (ஓய்வு) டப்ளியூ டப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, மேஜர் ஜெனரல் எம் முதன்நாயக்க (ஓய்வு) ஆர்எஸ்பீ,யுஎஸ்பீ , தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா (ஓய்வு), சங்கத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரி 1 ஆர்எஸ் மாமடுவ (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ மற்றும் சங்கத்தின் சில சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.