Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2018 16:34:56 Hours

வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள்

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது எண்ணக் கருவிற்கமைய வெஹெரதென்ன ரொஷான் மஹானாம வித்தியாலயத்தில் மாணவர்கள் 62 பேருக்கு பாடசாலை சீருடைகள் வழங்கும் நிகழ்வு நவம்பர் மாதம் (29) ஆம் திகதி இடம்பெற்றன.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இராணுவ பொது மக்கள் இணைப்பதிகாரி கேர்ணல் பீ.எம்.ஆர்.ஜே பண்டார அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மாணவர்களுக்கு திரு ருவன் அபேரத்ன மற்றும் திரு விஜய அல்விஸ் அவர்களின் அனுசரனையில் இந்த நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜே.எம்.யூ.டீ ஜயசிங்க அவர்கள் வருகை தந்து இந்த பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்வில் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். jordan release date | balerínky