Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2019 09:30:07 Hours

வன்னிப் படையினர் மற்றும் முன்னால் கிரிகெற் வீரரான ரொஷான் மஹானாம அவர்களால் வருடாந்த நன்கொடைகள் வழங்கி வைப்பு

வெஹெரதன்னையில் ரொஷான் விஜேராம நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ரொஷான் மஹானாம முன்பள்ளியின் வருடாந்த நன்கொடையான பாடசாலை உபகரணங்கள் இப் பாடசாலை மாணவர்களுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை (13) இப் பாடசாலையின் நிறுவனரான திரு ரொஷான் மஹானாம மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.

இதன் போது தரம் 1முதல் 5வரை காணப்படும் 84 மாணவர்களுக்கு 4500 ருபா பெறுமதியான பாடசாலை சீருடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகள் போன்றன வழங்கப்பட்டதோடு மேலும் ரொஷான் மஹானாம முன்பள்ளியின் 33 சிறார்களுக்கான முன்பள்ளி உபகரணங்கள் மற்றும் அனைத்து மாணவர்கள் பெற்றோர் போன்றோருக்கு மதிய உணவுகள் மற்றும் குளிர்பாணங்கள் போன்றன வழங்கப்பட்டன.

இந் நிகழ்வானது 62ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் ஜெ எம் யூ டீ ஜயசிங்க அவர்களின் வழிகாட்டலில் 623ஆவது மற்றும் 11ஆவது இலங்கை பீரங்கிப் படைப் பிரிவுகளின் படையினரின் ஒத்துழைப்போடு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் 56ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிட்டிய 623ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் எம்ட கே யூ பி குணரத்தின மற்றும் 62ஆவது படைத் தலைமையக உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். best Running shoes brand | GOLF NIKE SHOES