09th February 2024 10:00:50 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஏடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் ஆலங்குளம், படையலகு பயிற்சிப் பாடசாலைக்கு புதன்கிழமை (07 பெப்ரவரி) விஜயம் செய்தார்.
ஆலங்குளம் படையலகு பயிற்சிப் பாடசாலையின் தளபதியினால் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், பயிற்சிப் பாடசாலையின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்களை வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.
பின்னர், முகாம் வளாகம், பயிற்றுனர்கள் மற்றும் மாணவர்களின் நலன் மற்றும் பாடசாலையின் பல முக்கிய இடங்களை பார்வையிட்ட அவர், உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடினார்.
படையலகு பயிற்சிப் பாடசாலையின் பங்கு மற்றும் பணிகள் பற்றிய விரிவான விளக்கமளிக்கும் நிகழ்வில், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மற்றும் ஏனைய பங்கேற்பாளர்கள் பங்குபற்றினர். அதனைத் தொடர்ந்து வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி பாடசாலையில் சேவையாற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு உரையாற்றினார்.
இந்த விஜயத்தின் போது 54 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 56 வது காலாட் படைப்பிரிவு தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.