14th February 2024 17:34:21 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் அதன் கட்டளை அமைப்புக்களின் சிரேஸ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை (14 பெப்ரவரி 2024) உரையாற்றினார்.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி தனது உரையில் படையினருக்கிடையே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இராணுவ ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் யாழில் சமூக உறவுகளைப் பேணுவதில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
இந்த உரையின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.