14th February 2024 11:30:49 Hours
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 13) யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பூஜை வழிப்பாட்டில் ஈடுபட்டார்.
இந்து பாரம்பரியத்தின் விசேட ‘ஆசிர்வாத பூஜை’ ஆனது யாழ் தளபதிக்கு முக்கியத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் சேர்த்தது.
அன்றைய தினம் விடியற்காலை கோவிலின் 'உத்தராயண பூஜை' இடம்பெற்றதுடன், நூற்றுக்கணக்கான இந்து பக்தர்களுடன் யாழ் தளபதி விழாவில் கலந்துகொண்டார். விழாவின் முடிவில் கோவிலுக்கு தேவையான துப்புரவுப் பொருட்களை யாழ் தளபதி வழங்கினார். இதன்போது பல சிரேஷ்ட அதிகாரிகளும் பூஜையில் பங்கேற்றனர்.