07th April 2024 13:49:58 Hours
கிராலகொல்ல, மாளிகாதென்ன பிரதேசத்தில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பத்திற்கு வீடு நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 06 ஏப்ரல் 2024 அன்று இடம்பெற்றது.
111 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் மேற்கொள்ளும் கட்டுமான பணிக்கு அப்பகுதி கிராமவாசிகள் மற்றும் வணிகர்கள் நிதியுதவி வழங்கினர்.
4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் பீகே வருவான் கொடகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களினால் இவ்வீட்டிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இவ்விழாவின் போது 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி அதிகாரிகள் ,சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.