Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2023 09:23:08 Hours

மேலும் இரு மேஜர் ஜெனரல்களுக்கு அதிகார வாள்கள்

அண்மையில் நிலை உயர்வு பெற்ற விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் யூஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி ஆகியோர் அண்மையில் நிலை உயர்வு பெற்றதை தொடர்ந்து, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களிடமிருந்து செவ்வாய்க்கிழமை (நவம்பர் 07) அதிகார அ வாள்களை பெற்றுக்கொண்டனர்.

தளபதியின் அலுவலகத்தில், அவர்கள் இருவருக்கும் இராணுவத் தளபதி வாழ்த்துக்களை கூறியதுடன், இராணுவத்தில் புதிய நிலைகளுடன் தொடர்புடைய அதிகார வாள்களையும் வழங்கினார். அதேவேளை, இராணுவத் தளபதி அவர்கள் இராணுவத்திற்கு அவர்களின் அர்ப்பணிப்பை மேலும் மேம்படுத்துவதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்கள் இருவரும், இராணுவத் தளபதியின வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த்துடன், நிகழ்வின் நினைவுச் சின்னமாக இராணுவத் தளபதியுடன் படங்களும் எடுத்துக் கொண்டனர்.