Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st February 2024 16:50:01 Hours

மேஜர் ஜெனரல் டிஎஸ்கே விஜேசூரிய (ஓய்வு) அவர்களுக்கு தளபதியின் இறுதி மரியாதை

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இன்று (21 பெப்ரவரி) மறைந்த இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் டிஎஸ்கே விஜேசூரிய (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு ஜயரத்ன மலர்சலையில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இராணுவத் தளபதி தனது விஜயத்தின் போது, மறைந்த சிரேஷ்ட அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன், ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் டிஎஸ்கே விஜேசூரிய (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (18 பெப்ரவரி 2024) நாரஹேன்பிட்டி கொழும்பு இராணுவ மருத்துவமனையில் காலமானார். மேஜர் ஜெனரல் டிஎஸ்கே விஜேசூரிய (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் தேசத்திற்கான வீரம் மற்றும் சேவையின் பாரம்பரியத்தை விட்டு தனது 79 வது வயதில் காலமானார்.

மேஜர் ஜெனரல் டிஎஸ்கே விஜேசூரிய (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். அவர் பாடநெறி 4 இல் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றதுடன், அவர் 25 மே 1972 இல் இலங்கை பொறியியல் படையணியில் இரண்டாம் லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டார். அவரது சேவைக்காலத்தில் பல்வேறு நியமனங்களை வகித்ததுடன், தொடர்ந்து நிலை உயர்வுகளை பெற்ற அவர், 24 பெப்ரவரி 1999 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்தப்பட்டார். அவர் ஓய்வுபெறும் போது இராணுவ தலைமையகத்தில் இராணுவ பதவி நிலை பிரதானியாக பதவி வகித்தார்.