Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st January 2024 18:43:43 Hours

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 18 வது தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே. ஜயவர்தனவிற்கு பிரியாவிடை

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 18 வது தளபதியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் எம்.கே. ஜயவர்த்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 28 டிசம்பர் 2023 அன்று முல்லைத்தீவு பாதுகாப்பு படையினரிடம் இருந்து இராணுவ சம்பிரதாயங்களுடன் பிரியாவிடை பெற்றார்.

மேஜர் ஜெனரல் எம்.கே. ஜயவர்த்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் படையினருக்கு உரையாற்றியதுடன், தனது பதவிக்காலத்தில் தமது கடமைகளை வெற்றிகரமாகவும் திறம்படவும் செயற்படுத்துவதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். பிரியாவிடை நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.