Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st July 2017 18:26:54 Hours

முல்லைத்தீவில் ‘பேரின்ப இராணுவ வாழ்க்கை ‘ எனும் தலைப்பில் கருத்தரங்கு

இராணுவ தளபதியின் வழிக்காட்டலின் கீழ் இராணுவ மனோ தத்துவ பணியகத்தினால் நடாத்தும் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு கட்டமாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் (27)ஆம் திகதி வியாழக்கிழமை இந்த கருத்தரங்கு இடம்பெற்றது.

இந்த ஒருநாள் கருத்தரங்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 40 அதிகாரிகளினதும், 1050 படை வீரர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி நிர்வாக பணிப்பாளர் திரு ஜனக உதய குமாரவும்,பால்வினை நோய்கள் தலை மற்றும் எச்.ஐ.வி தடுப்பு பிரிவின் வைத்தியர் எச்.பி லலித் பிரியங்கர ‘குழந்தை பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுகாதார பால்வினை நோய்கள்’ தொடர்பாக விரிவுரைகளை இந்த கருத்தரங்கின் ஊடாக நிகழ்த்தினார்.

Running Sneakers | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News