Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th January 2024 15:11:52 Hours

மாவிட்டபுரம் கோவில் பூஜையில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதிக்கு ஆசீர்வாதம்

இந்து பாரம்பரியத்தின் புனித தலங்களில் ஒன்றான தெல்லிப்பழை, மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் 25 ஜனவரி 2024 அன்று விஷேட பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இடம்பெற்ற இரதோற்சவத்தின் போது புதிதாக நியமனம் பெற்ற யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சி.பி விக்கிரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பழங்கள் அடங்கிய பூஜை தட்டினை வழங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வின் வெற்றிக்கு இராணுவத்தினரின் கூட்டு முயற்சிக்கு பிரதம சிவாச்சாரியார் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் விசேட பூஜையில் கலந்து கொண்டனர்.