Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2024 13:26:11 Hours

மனிதவளத் தலைமைத்துவ விருது பெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு இராணுவத் தளபதி பாராட்டு

நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2024 ஆம் ஆண்டிற்கான கௌரமிக்க "உலகளாவிய மனிதவள தலைமைத்துவ விருது" 2024 பெப்ரவரி 15ம் திகதியன்று இந்தியாவின் மும்பையில் நடந்த உலக மனிதவள மேம்பாட்டு காங்கிரஸின் 32 வது விருது வழங்கும் விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அவரது சிறந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், 28 பெப்ரவரி 2024 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு பாராட்டி அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

இந்த விருது மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் நான்காவது தடவையாக தேசிய பாதுகாப்பு நிர்வாகம், கல்விசார் சிறப்பு, மனிதவள மேம்பாடு மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றில் அவரது சிறப்பான பங்களிப்புகளை சிறப்பித்துக் காட்டும் உலகளாவிய விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.