01st January 2024 18:25:18 Hours
பதுளை மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதிக்கு அருகில் வியாழக்கிழமை (டிசம்பர் 28) குறுக்காக வீழ்ந்திருந்த பாரிய மரமொன்றை அகற்றுவதற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் உதவினர்.
தகவல் கிடைத்ததும், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வருவதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு 2 வது இலங்கை ரைப்பிள் படையணி படையினருக்கு (SLRC) அறிவுறுத்தினார்.
2 வது இலங்கை ரைப்பிள் படையணியின் ஓர் அதிகாரி மற்றும் 7 சிப்பாய்கள் சில மணிநேரங்களில் தடையை வெற்றிகரமாக நீக்கினர்.