19th November 2017 08:25:13 Hours
யாழ்ப்பாண புத்துாரில் அமைந்துள்ள மத்திய பன்னசேக வித்தியாலயத்தில் 50 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு புதிய நுாலகம் ஒன்று (17) ஆம் திகதி வெள்ளிக் கிழமை திறந்து வைக்கப்பட்டது.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் வழிக்காட்டலின் கீழ் 52 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர வன்னியாரச்சி அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு தர்ம விஜய மண்டத்தின் அனுசரனையில் இடம்பெற்றது.
கொழும்பு தர்ம விஜய மண்டத்தினால் இராணுவத்திற்கு விடுத்த வண்டுகோளுக்கமைய இராணுவத்தின் 521 ஆவது படைத் தளபதி கேர்ணல் சுஜீவ ஹெட்டியாரச்சி மற்றும் 1 ஆவது விஜயபாகு காலாட் படையின் லெப்டினன்ட் கேர்ணல் தம்மிக ஜயரத்ன அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
இந்த நுாலகம் மங்கள விளக்கேற்றலுடன் பௌத்த மத ஆசீர்வாத வழிபாடுகளுடன் ரிபன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுனர் கௌரவ ரெஜினோல்ட் குரே ,ராஜகித்தியா பாண்டிய திருகோணமலை ஆனந்த தேரர்,மஹா நாயக்க அமரபுர சிறி தர்மரக்சித நிகாய,பம்பலபிடி சிறி வஜீரமய விகாராதிபதி கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வையிட்டு மஹரகமவிலுள்ள வஜிராராம பௌத்த நெறிப் பாடசாலையின் ஏற்பாட்டில் இப்பிரதேசத்தின் கல்வி பயிலும்45பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
jordan release date | Marki