Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2023 21:07:56 Hours

மத்திய படையினர் 'சமன் கடவுள்' சிலையை சுமந்து செல்லும் ஊர்வலத்திற்கு உதவி

உந்துவப் பௌர்ணமி தினத்தன்று (டிசம்பர் 26) மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் 19 ஆவது இலங்கைத் தேசியக் பாதுகாவலர் படையணியின் (SLNG) 63 படையினர் சுமனசமன் கடவுளின் சிலையை காவி செல்லும் ஊர்வலத்திற்கு தங்களின் மனித வளத்தை வழங்கினர். சிவனொளி பாத மலை வழிப்பாடு இத்தோடு ஆரம்பமானது

இரத்தினபுரி கல்பொத்தாவெல ரஜமஹா விகாரை வளாகத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் இராணுவத் தளபதியின் ஆசீர்வாதத்துடன் ஒவ்வொரு வருடமும் பெறும் வழமையான ஆதரவைப் பெற்றது.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களினால் இத்திட்டத்திற்கான அறிவுறுத்தல்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.