Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd December 2023 10:40:10 Hours

போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

விஜயபாகு காலாட் படையணியின் பிரிகேடியர் எஸ்.சி ஏக்கநாயக்க ஆர்எஸ்பீ அவர்கள் போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக புதன்கிழமை (நவம்பர் 29) இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

பிரிகேடியர் எஸ்.சி. ஏக்கநாயக்க ஆர்எஸ்பீ அவர்கள் தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் முறையான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.