27th December 2023 20:16:30 Hours
இராணுவ போர் கருவி படையணியின் பிரிகேடியர் பி.ஆர்.ஏ.ஜயரத்ன யூஎஸ்பீ அவர்கள் போர்க்கருவி சேவைகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக இராணுவத் தலைமையகத்தில் டிசம்பர் 21 அன்று நடைபெற்ற நிகழ்வுகளுடன் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மகா சங்க உறுப்பினர்களின் ‘பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில், சுப நேரத்தில் தனது அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் புதிய பணிப்பாளர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
தேரர் ஒருவரின் சொற்பொழிவு (அனுஷாசனம்), ஆசிர்வாதங்களுடன் பிரிகேடியர் பி.ஆர்.ஏ.ஜயரத்ன யூஎஸ்பீ அவர்கள் புதிய அலுவலகத்தை பொறுப்பேற்றார்.
அலுவலக பதவியேற்பு விழாவில் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.