19th August 2018 11:36:49 Hours
கிளிநொச்சியில் உள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவின் படையினரின் ஏற்பாட்டில் பூனரின் பிரதேசத்தில் வசிக்கும் 312 பொதுமக்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வானது பூநகரியில் அமைந்துள்ள கேஎல்/ஸ்ரீ விக்னேஸ்வரா பாடசாலையின் வளாகத்தில் கடந்த (12) ஆம திகதி இடம் பெற்றதுடன். கண் பார்வையற்ற பொதுமக்களை மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டனர்.
இந் நன்கொடை நிகழ்ச்சித்திட்டத்தின் நிதியுதவியானது கிளிநொச்சி இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் 66 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் பிரியந்த ஜயவர்தன ஆகியோரால் வழங்கப்பட்டது. அதற்கமைய ஆலோசகரான கண் மருத்துவர் வைத்தியர் நிருண்வேரும் அவரது மருத்துவ குழுவும் பொதுமக்களை பரிசோதித்தனர் அதன் பின்னர் மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக 66 ஆவது படைப் பிரிவின் கட்டளை படைப் பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் பிரியந்த ஜயவர்தன மற்றும் 661 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சியின் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு.கிருஷ்ணராஜா கிளிநொச்சியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க செயலாளர் திரு. சேதுபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் கேணல் நிர்வாகத்தின் கேர்ணல், ஜெனரல் மற்றும் 66 ஆவது படைப் பரிவின் அதிகாரிகள் மற்றும் சிவில் நிருவகத்தின் கட்டளை அதிகாரி மற்றும் பலரும் கலந்து கொண்டனர். Sport media | Nike