Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2023 08:50:58 Hours

புதிய சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு தளபதியின் வாழ்த்துக்கள்

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ்.பியன்வில வீஎஸ்வீ யுஎஸ்பீ எட்பிஏ(இங்கிலாந்து)என்டிசி(இந்தியா)பீஎஸ்சி அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை செவ்வாய்க்கிழமை (17) இராணுவ தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

சுமுகமான சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் புதிய நியமனம் பெற்றவருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், பொருத்தமான விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ்.பியன்வில வீஎஸ்வீ யுஎஸ்பீ எட்பிஏ(இங்கிலாந்து)என்டிசி(இந்தியா)பீஎஸ்சி அவர்கள் பொதுவாக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தற்போதைய நிலை, தற்போதைய பங்கு மற்றும் பணிகளை சுருக்கமாக விளக்கினார்.

சுமூகமான சந்திப்பின் உச்சக்கட்டத்திற்கு முன்னதாக, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ்.பியன்வில வீஎஸ்வீ யுஎஸ்பீ எட்பிஏ(இங்கிலாந்து)என்டிசி(இந்தியா)பீஎஸ்சி அவர்களுக்கு அந்நாளின் நினைவாக நினைவுச் சின்னங்களை வழங்கினார்.