01st January 2024 18:47:35 Hours
பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத பாதையில் தடையாக இருந்த பாரிய மண் மேடு மற்றும் கற்பாறைகளை அகற்றுவதற்கு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரி ஒருவர் உட்பட இராணுவ வீரர்கள் குழுவொன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) தமது மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது.
தகவல் அறிந்த மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் அந்த மண் மேட்டை அகற்றி புகையிரத போக்குவரத்தை சீர் செய்ய உதவுமாறு தனது படையினருக்கு அறிவுறுத்தினார்.
ஒரு அதிகாரி மற்றும் 13 சிப்பாய்கள் அவசரப்பணியில் கலந்துகொண்டு சில மணிநேரங்களில் போக்குவரத்தினை வழமைக்கு கொண்டுவந்தன