28th December 2023 11:20:47 Hours
இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் பிரிகேடியர் ஈ.ஏ.டி.கே எதிரிசிங்க அவர்கள் சுகயீனமுற்றிருந்த நிலையில் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் காலமானார். அவர்களின் நல்லடக்கம் புதன்கிழமை (27) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் அவரது இராணுவத் தோழர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாபெரும் கூட்டத்தின் மத்தியில் இடம்பெற்றது
ஓய்வு பெற்ற சிரேஸ்ட அதிகாரிகள், முதன்மை பணிநிலை அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகள், பணிப்பாளர்கள் மற்றும் பலர் அந்தி சாயும் போது மறைந்த அதிகாரிக்கு கௌரவம் செலுத்தினர்.
இறுதி ஊர்வலம் கல்லறையின் நுழைவாயிலை அடைந்ததும் சவப் பேழை தேசியக் கொடியினால் போர்த்தப்பட்டு, துப்பாக்கி வண்டியில் வைக்கப்பட்டு பேழையின் பின்னால் படையினர் அணிவகுத்துச் சென்றனர்.
இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஷ்ட அதிகாரிகளின் பிரதிநிதிகள் சவப்பெட்டியை சம்பிரதாயமாகப் பெற்றுக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் சவப்பெட்டியின் பின்னால் அணிவகுத்து மயானத்தை நோக்கிச் சென்றனர்.
இராணுவத் தளபதியினால் வெளியிடப்பட்ட முறையான சிறப்புப் கட்டளை I நிகழ்வில் துக்கத்தில் இருந்தவர்களுக்கு வாசிக்கப்பட்டது. இராணுவ மரபுகளுக்கு இணங்க படையினர் இறந்தவருக்கு வணக்கம் செலுத்தி அடையாள துப்பாக்கி வணக்கத்தை வழங்கினர், இது ஒரு இராணுவ அதிகாரியின் மறைவின் போது பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலி ஆகும்.
கடைசி வாசிப்பிற்கு பிறகு, சிரேஸ்ட வீரர் அவரது நித்திய ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி எழுப்பப்பட்டதன் பின்னர் உடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன் பின்னர், பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி, நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளரும் இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஆகியோர் இணைந்து பிரிகேடியர் ஈ.ஏ.டி.கே எதிரிசிங்க அவர்கள் தனது புகழ்பெற்ற பணியின் போது பெற்ற பதக்கங்களை குடும்பத்திற்கு வழங்கினர்.
பிரிகேடியர் ஈ.ஏ.டி.கே எதிரிசிங்க அவர்களின் இல்லத்திற்குச் சென்ற இராணுவத் தளபதி அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், அவரது இறுதி ஊர்வலத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட சிறப்பு கட்டளை 1 பின்வருமாறு;