Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th February 2023 07:41:10 Hours

பாகிஸ்தான் கூட்டுபடை தலைவருக்கு இராணுவ தலைமையகத்தில் இராணுவ மரியாதை

ஐந்து நாள் விஜயத்தை மேற் கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தானின் கூட்டுப் படைகளின் குழு தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா அவர்கள் வெள்ளிக்கிழமை (10) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்.

வருகை தந்த பாகிஸ்தானின் கூட்டுப் படைகளின் குழு தலைவரை இராணுவத் தலைமையக பிரிகேட் தளபதி கேணல் டிகேஆர் பெரேரா அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இராணுவத் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைகளுக்கு அமைய ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, எச்ஐ அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், பாகிஸ்தானின் கூட்டுப் படைகளின் குழு தலைவர் அவர்களை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ.எம்.சி.பி விக்கிரமசிங்க ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியுபிஎஸ்சி அவர்கள் அணிவகுப்பு மரியாதைக்கு அழைத்து சென்றார்.

அதன் பின்னர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கௌரவ அதிதியை நுழைவாயிலில் மரியாதையுடன் வரவேற்றதுடன், இராணுவத் தலைமையகத்தின் பிரதம பணிநிலை அதிகாரிகளுக்கு அவரை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து வருகையின் நினைவுகளைச் குறிக்கும் வகையில் பிரதம அதிதி சிரேஷ்ட அதிகாரிகளுடன் குழு படம் எடுத்து கொண்டார். பின்னர், இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூ டபிள்யூவி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி பிஎஸ்சி, அவர்களால் சம்பிரதாயமான உரையாடல்களுக்காக தளபதியின் அலுவலகத்திற்குச் அழைத்து செல்லப்பட்டார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இலங்கை இராணுவம் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையேயான விடயங்கள் தொடர்பாக உரையாடல்களின் போது கருத்துக்களை பரிமாறிக் கொண்டார். அவர்கள் மேலும் பயிற்சி தொகுதிகள், பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொது விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

இராணுவத் தளபதி அலுவலகத்திற்கு வருகை தந்த பாகிஸ்தானின் கூட்டுப் படைகளின் குழு தலைவர் கலந்துரையாடலின் முடிவில் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார். இரு இராணுவத் தலைவர்களும் தங்களுடைய புரிந்துணர்வு மற்றும் நல்லெண்ணத்தை மேலும் வளர்த்து கொள்ளும் நிமித்தம் நினைவுச்சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.

தளபதியின் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் இராணுவ செயலாளரும் கலந்துகொண்டார்.