11th March 2024 14:57:54 Hours
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் 2024 மார்ச் 09 ஆம் திகதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த பிரதானியை இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சி.ஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றதுடன், இலங்கை சமாதான ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்று வரும் பாடநெறிகள் குறித்தும் விளக்கினார். உலகளாவிய அமைதி காக்கும் நடவடிக்கைகளின் முன் முயற்சி மூலம் வழங்கப்படும் பாடத்திட்டங்களுக்கான பாடத்திட்டத்தின் விவரங்கள், அடிப்படை வரிசைப்படுத்தல் பாடநெறிகள், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அடிப்படை மற்றும் உயர் பாடநெறிகள் மற்றும் களப் பயிற்சி ஆகியவை இங்கு வழங்கப்படுகின்றன.
கலந்துரையாடலைத் தொடர்ந்து, பதவி நிலை பிரதானி இலங்கை சமாதான ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவனத்தின் படையினருக்கு உரையாற்றியதுடன் அவர் இராணுவ வீரர்களாக ஒழுக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பின்னர் அவர் பயிற்சி நிறுவனத்திற்கு வருகை தந்ததை நினைவு கூறும் வகையில் மாங்கன்று நட்டுவைத்தார். பின்னர் அவர் இலங்கை சமாதான ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவனத்தின் தளபதி மற்றும் பணியாளர்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர், அவர் இலங்கை சமாதான ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டதுடன், நிறுவனத்தின் உட்கட்டமைப்பு தரத்தை மேம்படுத்துவதற்கு தனது வழிகாட்டுதலையும் வழங்கினார்.