Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th February 2024 14:51:48 Hours

நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவத் தளபதியிடமிருந்து அதிகாரச் சின்னங்கள்

இராணுவத்தின் மேஜர் ஜெனரல்களாக நிலை உயர்வு பெற்ற இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் பீஎன் கொடல்லவத்த யூஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி ஆகியோர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தனர். 76 வது தேசிய சுதந்திர தினத்துடன் இணைந்த இந்த சந்திப்பின் போது 2024 பெப்ரவரி 04 ம் திகதியன்று தளபதி அலுவலகத்தில் இராணுவத் தளபதியிடமிருந்து அவர்கள் அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டனர்.

சுமுகமான கலந்துரையாடல் மற்றும் வாழ்த்துக்களைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி ஒவ்வொரு அதிகாரிக்கும் அவர்களின் புதிய அதிகாரத்தின் சின்னமாக வாளினை வழங்கினார். சிரேஷ்ட அதிகாரிகள் இராணுவத் தளபதிக்கு தமது நன்றிகளைத் தெரிவித்ததுடன், நிகழ்வின் நினைவுகளைச் சேர்க்கும் வகையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதுடன் நிகழ்வு நிறைவுற்றது.