Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2022 20:04:47 Hours

நல்லெண்ணச் சுற்றுப்பயணத்தில் இந்தியக் கடற்படைத் தளபதி இராணுவத் தலைமையகத்திற்கு வருகை

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் பீவிஎஸ்எம் எவிஎஸ்எம் விஎஸ்எம் எடிசி அவர்களின் ஐந்து நாள் இலங்கைக்கான நல்லெண்ண விஜயத்தின் போது செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் இராணுவ தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்.

இவ் வருகையானது தற்போதுள்ள இருதரப்பு உறவுகள் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் அமைந்ததுடன், இராணுவத் தலைமையகத்தில் வருகை தந்த கடற்படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைகளுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டன. இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதியை இராணுவத் தலைமையகப் பிரிகேட் தளபதி கேணல் டி.கே.ஆர் பெரேரா அவர்கள் வரவேற்றார்.

வருகை தந்த இந்தியக் கடற்படைத் தளபதிக்கு, இராணுவத் தலைமையக இராணுவத் தளபதியின் அலுவலக நுழைவாயிலில் இராணுவத் தளபதியினால் பிரதம பதவி நிலை அதிகாரிகள் அறிமுகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து இராணுவத் தலைமையகத்தின் நினைவுகளின் அடையாளமாக அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளும், கடற்படைத் தளபதியும் இணைந்து குழு படம் எடுத்துக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, அவர் இராணுவ தளபதி அலுவலகத்திற்கு முறையான தொடர்புகளுக்கு அழைக்கப்பட்டார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடான சந்திப்பின் போது, இலங்கை இராணுவம் மற்றும் இந்திய கடற்படை ஆகிய இருதரப்பு விடயங்கள் தொடர்பாக இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு விஜயம் செய்தமைக்கு முக்கியத்துவம் சேர்க்கும் வகையில், வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதி, தளபதியின் அலுவலகத்தில் உள்ள விஷேட பிரமுகர் பதிவேட்டு புத்தகத்தில் தனது பாராட்டுக்களை பதிவு செய்தார்.

அட்மிரல் ஆர் ஹரி குமார் வெளியேறுவதற்கு முன், இரு இராணுவத் தலைவர்களும் தங்கள் புரிந்துணர்வு மற்றும் நல்லெண்ணத்தைத் தொடர உறுதியுடன் நினைவுப் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.

தளபதியின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்கிரமசிங்க ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களும் கலந்துகொண்டார்.