21st July 2023 22:24:41 Hours
குருநாகல் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற அதிகாரிகளுக்கான 2ம் காலாண்டு பயிற்சி தினத்தில் பிரதம அதிதியாக படையணி தலைமையகத்தின் அழைப்பின் பேரில் இராணுவ தளபதியும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.
பயிற்சி தினத்தில் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 150 அதிகாரிகள் பங்கேற்றதுடன், உடற்பயிற்சி, அணிநடைப் பயிற்சி, விரிவுரைகள் மற்றும் பொழுதுபோக்கு அமர்வுகளுடன் விஷேட இரவு அமர்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே படையணி அதிகாரிகளின் உணவகத்தில் நடைபெற்ற அமர்வின் போது அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
வளாகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் எச்ஏ கீர்த்திநாத ஆர்எஸ்பீ கேஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். மேஜர் ஜெனரல் உதய பெரேரா (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ யுஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் விருந்தினர் பேச்சாளராக கலந்துகொண்டு ' எது ஒரு தலைவரை உருவாக்குகிறது’ என்ற தலைப்பில் விரிவுரையை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சி முடிவில் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத்தளபதி இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, மேஜர் ஜெனரல் உதய பெரேரா (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ யுஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களுக்கு வழங்கிய பங்களிப்பிற்காக நன்றி தெரிவித்துடன் நினைவுசின்னமும் வழங்கினார்.
பொது பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சீபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர யூஎஸ்பீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.