23rd January 2024 16:17:50 Hours
படையணியின் படையணி உபகரண கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மத்தியில் தலைமைத்துவ குணங்கள் மற்றும் தொழில் வளர்ச்சியை வளர்க்கும் நோக்கத்துடன், தலைமைத்துவம் மற்றும் தொழில் மேம்பாடு சார்ந்த சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி 19 ஜனவரி 2024 ம் திகதியன்று ஹெரலியாவல, இலங்கை தேசிய பாதகாவலர் படையணி தலைமையகத்தில் நடத்தப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு தலைமைத்துவ மேம்பாட்டு உத்திகள் பற்றிய விரிவுரையை இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எச்.ஏ கீர்த்திநாத ஆர்எஸ்பீ கேஎஸ்பீ பீஎஸ்சீ, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கேணல் செயற்திட்டம் கேணல் பீ.ஏ.எம். விக்கிரமசிங்க ஆகியோர் நிகழ்தினர்.
மொத்தம் 150 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.