29th December 2023 20:38:44 Hours
இயந்திரவியல் காலாட் படையணியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகள் விடுதி 24 டிசம்பர் 2023 அன்று இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்களால் சம்பிரதாயபூர்வமாக தம்புலுஹல்மில்லேவயில் திறந்து வைக்கப்பட்டது.
இயந்திரவியல் காலாட் படையணியின் வளாகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியை நிலைய தளபதி அன்புடன் வரவேற்றார்.
பின்னர், மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்களால் பதாகை திரைநீக்கம் செய்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகள் விடுதி திறந்து வைக்கப்பட்டது.
அடுத்து, இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதி சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து கட்டிடத்தை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.