Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2018 13:40:11 Hours

ஜேர்மன் நாட்டவரின் சடலத்தை மீட்டெடுத்த இலங்கை இராணுவ சிங்கப் படையணியினர்

அந்த வகையில் 3ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் 02 அதிகாரிகள் மற்றும் 17 படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது உலக முடிவை பார்வையிடச் சென்ற 35வயதை உடைய ஜேர்மன் நாட்டு பெண்னான செல்வி யூலியா எல்கா என்பவரின் சடலத்தை மீட்டெடுத்துள்ளனர். அசாதாரண காலநிலை மாற்றத்தின் காரணமாக இடம் பெற்ற இச் சம்பவத்தில் எவ்வாறாயினும் படையினர் ஒன்றினைந்து இப் பெண்ணின் சடலத்தை காலை (11) கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்களின் கண்காணிப்பின் இராணுவப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதுடன் மேற்படி அதிகாரிகளுக்கு விடயத்தை அறிவித்ததுடன் படையினரால் கயிறு மற்றும் பல உபகரணங்களைக் கொண்டு சடலம் மீட்டெடுக்கப்பட்டது.

இப் படையினர் கீழ் 112ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் அஜந்த விஜேசூரிய மற்றும் 11ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் டீ ஜெ நாணயக்கார போன்றவர்களின் வழிகாட்டலின் கீழ் இத் தேடுதல் நடவடிக்கை இடம் பெற்றது.

மேலதிக விசாரனைகளை பட்டிபொல பொலிசார் மேற்கொள்கின்றனர். best shoes | Womens Shoes Footwear & Shoes Online