22nd December 2017 16:48:39 Hours
இலங்கை கணினி அவசரத் தயார்நிலைப் பிரிவினரல் (SLCERT) சமூக வலைத்தளங்கள் மற்றும் அவற்றின் பாதிப்புக்கள் எனும் தலைப்பிலான கருத்தரங்கு தடுப்பு மருந்து மற்றம் மனநலச் சேவைப் பணிப்பக பிரிகேடியர் (வைத்தியர்) திருமதி எச் டி விக்கிரமசேகர அவர்களின் பங்களிப்போடு கொழும்பு நாரெஹெண்பிட இராணுவ வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் கடந்த புதன் கிழமை (20) இடம் பெற்றது.
இக் கருத்தரங்கில் எவ்வாறு சமூக வலைத்தளங்களினால் ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தவிர்த்து சரியான முறையில் பயன்படுத்தி உடல் உள ரீதியாக திடப்படுத்தல் போன்றவ தொடர்பாக இராணுப் படையினருக்கு இடம் பெற்றது.
திரு ரொஷான் சந்திரகுப்த கணினி அவசரத் தயார்நிலைப் பிரிவு (SLCERT) மற்றும் திரு பூர்ண விக்கிரமசிங்க போன்றௌரால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டது.
இராணுவத் தலைமையகங்களின் 350 இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் தடுப்பு மருந்து மற்றம் மனநலச் சேவைப் பணிப்பகமானது இவ்வாறான கருத்தரங்குகளை எதிர் காலத்தில் அனைத்து படைத் தலைமைகங்களில் நிகழ்த்த தீர்மானித்துள்ளது.
Running sport media | Air Jordan