29th December 2023 20:48:14 Hours
இராணுவ போர் கருவி படையணியின் பிரிகேடியர் டபிள்யூஎம்எஸ்என் விஜயகோன் என்டிசீ எஎடிஓ அவர்கள் கிழக்கு முன்னரங்க பராமரிப்புப் பிரிவின் தளபதியாக வியாழக்கிழமை (28) மின்னேரியாவில் அவரது அலுவலகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
அவர் தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் முன்னிலையில் பிக்குகளின் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றலுக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
கடமை ஏற்பு விழாவில் கிழக்கு முன்னரங்கு பராமரிப்புப் பிரிவின் பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்