29th December 2023 20:41:09 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் வெலிகந்த பிரதேசத்தில் வசிக்கும் தகுதியான பெண் சிப்பாய் ஒருவருக்கு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை வியாழக்கிழமை (28 டிசம்பர் 2023) நாட்டினார்.
மகாவலி அதிகார சபையின் வெலிகந்த வதிவிட திட்ட முகாமையாளர் திரு. சுகத் செனவிரத்ன அவர்கள் இத் திட்டத்திற்காக20 பேர்ச் காணியை நன்கொடையாக வழங்கினர். கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதியின் வேண்டுகோளின் பேரில் திரு.கெங்கசுதன் மயில்வாகனம் அவர்களினால் திட்டத்திற்கான நிதியுதவி வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நயோமி ரணவீர அவர்களும் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் பெண் லான்ஸ் கோப்ரலுக்கு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
அதன்படி, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் வீட்டின் கட்டுமானத்திற்கான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.