Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st January 2024 18:40:09 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமைகைத்தின் முயற்சியில் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களுக்கு மொழி கற்கை

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கில் சிங்களம் மற்றும் தமிழ் பேசும் மாணவர்களிடையே மொழிப் பரிமாற்ற நிகழ்ச்சி திட்டம் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. வெலிகந்த, நெலும்வெவ மகா வித்தியாலயத்தில் சிங்கள மாணவர்களுக்கான தமிழ் மொழி பாடநெறி ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது, அதன்பின் கொக்கட்டிச்சோலை ஆர்.கே.எம் வித்தியாலயத்தில் 103 மாணவர்களை உள்ளடக்கி இரண்டாம் கட்ட பயிற்சி 30 டிசம்பர் 2023 அன்று இடம்பெற்றது.

மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், மதகுருமார்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் ‘சமாதானத்திற்கான சர்வமதக் கூட்டமைப்பினரின்’ அதிகாரிகள் ஆகியோர் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர். 'அமைதிக்கான சர்வமதக் கூட்டமைப்பு' ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பாடசாலை பொருட்கள் விநியோக செய்யப்பட்டதுடன் மாணவர்கள் கலாசார நிகழ்வுகளில் தங்களின் திறனை வெளிப்படுத்தினர். கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரின் வழிகாட்டுதலின் கீழ் 11 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் இந்த நிகழ்வை ஏற்பாடுசெய்யதனர்.