Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th June 2023 10:50:12 Hours

ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தளபதியை சந்திப்பு

விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் எஸ்கே பத்திரன டப்ளியூடப்ளியூவீ மற்றும் ஆர்டப்ளியூபீ பார், ஆர்எஸ்பீ பார், வீஎஸ்வீ மூன்று பார்கள், யுஎஸ்பீ எம்எஸ்சீ(எம்ஒஏ) யுஎஸ்ஏ எம்எஸ்சி, முகாமை முதுமானி (இந்தியா), எம்ஐஎம், என்டிசீ (இந்தியா) பீஎஸ்சீ தனது சேவையிலிருந்து ஓய்வுபெறுவதை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இராணுவ மரபுப்படி இராணுவத் தலைமையகத்தில் திங்கட்கிழமை (26) சந்தித்தார்.

இராணுவத் தலைமையகத்தில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் சம்பிரதாய கௌரவ அணிவகுப்பு மரியாதையும் பிரதம அதிதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதம அதீதி அவர்களை நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் வரவேற்றார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதிக்கு இராணுவத் தலைமையக பிரதான கட்டிடத்தின் பிரதான நுழைவாயிலில் அன்பான வரவேற்பு அளித்துடன் இராணுவத் தளபதி விமானப்படைத் தளபதியை தனது அலுவலகத்திற்கு அழைப்பதற்கு முன்பு அங்கு இராணுவத் தளபதி மற்றும் அனைத்து முதன்மைப் பணிநிலை அதிகாரிகள் வருகை தந்த விமானப்படைத் தளபதியுடன் குழு படம் எடுத்தனர்.

இராணுவத் தளபதியுடனான இந்தச் சுருக்கமான சந்திப்பின் போது, இரு சேவைகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டுப் பணிகள் மற்றும் பொதுவான விடயங்கள் தொடர்பிலும் முப்படைகளின் கடமைகளை தொடர்பிலான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும், இரு நிறுவனங்களுக்கிடையில் தற்போதுள்ள ஒத்துழைப்பு குறித்த கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் எஸ்கே பத்திரன டப்ளியூடப்ளியூவீ மற்றும் ஆர்டப்ளியூபீ பார், ஆர்எஸ்பீ பார், வீஎஸ்வீ மூன்று பார்கள், யுஎஸ்பீ எம்எஸ்சீ(எம்ஒஏ) யுஎஸ்ஏ எம்எஸ்சி, முகாமை முதுமானி (இந்தியா), எம்ஐஎம், என்டிசீ (இந்தியா) பீஎஸ்சீ அவர்கள் இராணுவ தளபதியின் அலுவலகத்தில் உள்ள விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.