24th December 2022 23:30:47 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, மற்றும் படையினர் உங்கள் அனைவருக்கும் நத்தார் மற்றும் பண்டிகைகால வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள். இது உங்களுக்கு புன்னகை, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும்! தளபதியின் சுருக்கமான வாழ்த்து செய்தி இதோ!
இராணுவ தளபதியின் வாழ்த்து செய்தி
உலகம் முழுவதற்கும் அமைதி மற்றும் அன்பின் செய்தியைக் கொண்டு சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளின் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில், இலங்கை இராணுவத்தின் அனைத்து கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களுடன் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அமைதியான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமைதியின் இளவரசர், இயேசு கிறிஸ்து, கருணை, மன்னிப்பு, சமத்துவம் மற்றும் நீதியின் முக்கிய மனித விழுமியங்களை மேம்படுத்துவதற்காக, தனது போதணைகள் மூலம் கிறிஸ்தவர்களை அறிவூட்டினார். இந்த புனிதமான சந்தர்ப்பம், இந்த உயர்ந்த மனிதப் பண்புகளுடன் நம் இதயங்களை வளர்த்துக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாகும். மேலும், தேசத்தின் முன்னேற்றத்திற்காக சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்தை வளர்ப்பதில் இலங்கை இராணுவ கிறிஸ்தவ சமூகத்தால் வழங்கப்பட்ட உதவிகளை நான் பாராட்டுகிறேன். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி ,செழிப்புடன் ஆசீர்வதிக்கப்பட்ட நத்தார் தினமாக அமையட்டும்!