22nd April 2024 11:48:15 Hours
அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தினால் 19 ஏப்ரல் 2024 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களில் இலங்கை சிங்க படையணி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர்.
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் சிங்க படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூ.பீ.ஏ.டி.டப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ மற்றும் சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நெலுகா நாணயக்கார ஆகியோர் பாரம்பரிய மங்கல விளக்கேற்றியதனை தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது.
பனிஸ் சாப்பிடுதல், தலையணை சண்டை, ரபான் அடித்தல், யானைக்கு கண் வைப்பது, கயிறு இழுத்தல், வினோத உடை மற்றும் பல பாரம்பரிய மற்றும் வேடிக்கையான விளையாட்டுகள் பார்வையாளர்கள் அனைவரையும் மிகவும் மகிழ்விக்கும் வகையில் அன்றைய நிகழ்ச்சிகளில் ஆதிக்கம் செலுத்தின.
விழாவின் நிறைவில் படைத்தளபதி, சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி கிண்ணங்களை வழங்கினர்.
இப் புத்தாண்டு களியாட்ட நிகழ்வுகளில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் அவர்களது துனைவியர் மற்றும் பிள்ளைகள் பங்கு பற்றினர்.