01st January 2024 19:00:10 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியும் தலைமை சமிக்ஞை அதிகாரியுமான ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎஸ் ரத்நாயக்க என்டியூ அவர்களுக்கு இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினரால் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31) சம்பிரதாய நிகழ்வுடன் பனாகொட இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் கெளரவ மரியாதை வழங்கப்பட்டது.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை இலங்கை சமிக்ஞைப் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எஸ்ஜேகேடி ஜயவர்தன யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இலங்கை சமிக்ஞைப் படையணியின் போர் வீரர்கள் நினைவுச் தூபிக்கு மலர்அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினரால் சம்பிரதாயமான அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், அவர் அனைத்து அதிகாரிகளுடனும் குழு படம் எடுத்துகொண்டார். பின்னர் படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருடன் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன் உணவகத்தில் தேநீர் விருந்தில் கலந்துகொண்டதுடன் மதிய உணவிலும் கலந்துகொண்டார்.
பின்னர், அவர் படைத் தளபதி அலுவலகத்தில் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களிடம் படைத் தளபதி அதிகார கோதுவை அடையாளமாக கையளித்தார் மற்றும் அதிதிகள் பதிவேட்டில் பாராட்டுக் குறிப்புகளை கையெழுத்திட்டார். விரைவில், ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு ஒரு தெரு வரிசை பிரியாவிடை மரியாதை வழங்கப்பட்டது.
மாலை வேளையில் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎஸ் ரத்நாயக்க என்டியூ அவர்கள் பெயரில் பாரம்பரிய இராபோசண விருந்து இலங்கை சமிக்ஞைப் படையணி அதிகாரிகளின் உணவகத்தில் நடத்தப்பட்டது. இதன்போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் பங்கேற்றனர்.