19th January 2024 15:21:08 Hours
மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பதில் படைத் தளபதியாக மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் ஜனவரி 16 ம் திகதி பனாகொட இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் கடமையேற்றார்.
நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரி நிலைய தளபதி மற்றும் அனைத்துப் பணிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அணிவகுப்பு சதுக்கத்தில் மரியாதைஅணிவகுப்பு வழங்கப்பட்டது.
மகா சங்கத்தினரின் செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
மேலும், படையணியின் பதில் படைத் தளபதி தலைமையக வளாக போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு மரியாதை செலுத்தியதுடன், படையணியின் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றினார்.