Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th December 2023 09:15:48 Hours

இலங்கை இராணுவத் தளபதி இந்திய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியை சந்திப்பு

இந்தியாவிற்கான நல்லெண்ணப் விஜயத்தை மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இந்திய பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் அனில் சௌஹான் பீவீஎஸ்எம் யுவைஎஸ்எம் ஏவீஎஸ்எம் எஸ்எம் வீஎஸ்எம் அவர்களை புதன்கிழமை (டிசம்பர் 06) அன்று அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையிலான பல்வேறு பயிற்சி தொகுதிகளை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகளை எவ்வாறு சுமுகமாக தீர்க்க முடியும் என்பது போன்ற பல விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

சுமுகமான சந்திப்பின் முடிவில், பாராட்டு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. இலங்கை இராணுவத்தின் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, முழு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும் தளபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியுமான பிரிகேடியர் பிஎம்எ பாலசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.