Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th November 2023 10:12:19 Hours

இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவின் 3 வது ஆண்டு நிறைவு

இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவு 2023 நவம்பர் 18 ஆம் திகதி தனது 3 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. பொறியியல் படைப்பிரிவு படையினரிடயே தோழமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து மத நம்பிக்கைகளின் ஆசீர்வாதங்களுக்கு பெருமை சேர்த்தது.

இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இந் நிகழ்வுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.

3 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பேராசிரியர் ஹேமந்த பெரேரா மற்றும் இலங்கையின் முன்னணி மருத்துவமனைகளில் பணிபுரியும் மகப்பேறு நிபுணர்கள் குழுவினரால் 'சமூக ஆரோக்கியம்' பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 15 நவம்பர் 2023 அன்று மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்டது.

வண. பம்பராண்தே வஜிரானந்த தேரர் அவர்களால் 16 நவம்பர் 2023 அன்று வாழ்க்கையை சிறப்பாக்க மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்கி "சிங்கலோவாதசூத்திரத்தின்" விரிவாக்கத்தில் கவனம் செலுத்தி மேலும் அர்ப்பணிப்பும் செயல்திறனும் வாழ்க்கையையும் பணியிடத்தையும் எவ்வாறு சிறந்ததாக்குகிறது என்பதற்கு சிறப்பு முக்கியத்து அளித்து ஒரு தர்ம சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

இதற்கிடையில், நவம்பர் 17 அன்று "துசித முதியோர் இல்லத்தில்" பெரியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன் பின்னர் அந்த இடத்தை சுகாதாரமானதாகவும் மாசுக்கள் இல்லாததாகவும் மாற்றுவதற்காக படையினர் வளாகத்தை சுத்தம் செய்தனர்.

ஆண்டு நிறைவு நாளில் (நவம்பர் 18) படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு வருகையின் போது பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் வண்ணமயமான மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.

படையினருக்கான உரையினை தொடர்ந்து அனைத்து நிலையினருடனான மதிய விருந்துபசாரமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆலை பொறியியல் பிரிகேட் தளபதி, கட்டளை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.