Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd December 2022 20:39:01 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புதிய தளபதி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 50 வது தளபதியாக வியாழன் (டிசம்பர் 22) கொஸ்கம சீதாவாகவில் உள்ள இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிய இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியினை துணைத் தளபதி மேஜர் ஜெனரல் துசித சில்வா அவர்கள் மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலைய தளபதி கேணல் எச்ஏ கீர்த்திரத்ன ஆகியோர் அன்புடன் வரவேற்றனர். அந் நாளில் முதல் நிகழ்வாக தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பு என்பன வழங்கப்பட்டன.

அவர் தனது புதிய அலுவலக வளாகத்திற்கு வருகை தந்த பின்னர், 'செத்பிரித்' பாராயணங்கள் மற்றும் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், சுப வேளையில் அலுவலகத்தை சம்பிரதாயமாக ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டார். அந் நாளின் நினைவுகளை சேர்க்கும் முகமாக புதிய தளபதி அவர்கள் வளாகத்தில் மாங்கன்று நட்டதுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையணி அனைத்து நிலை தேநீர் விருந்திலும் கலந்துகொண்டார். அத் தினத்தின் இறுதி நிகழ்வாக தளபதி படையினருக்கு உரையாற்றினார்.

இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் நியமனம் பெற்றதனை தொடர்ந்து மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் இந் நியமனத்திற்கு முன்னர் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையாக தளபதியாக கடமையாற்றினார்.